SIVASIVA

Tuesday 8 October 2013

கும்பகோணத்தில் அய்யாவடி - மகா பிரத்தியங்கிரா தேவி

ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி

அருள்தரும் மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அய்யாவடி (ஐவர்பாடி) என்ற கிராமத்தில்அமைந்துள்ளது இந்த கோவில் இந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது என்பது தனி சிறப்பு. 18 சித்தர்கள் பூஜித்ததும், அகஸ்தியருக்கு காட்சி கொடுத்ததும், மேகநாதன் (இந்திரஜித்) நிகும்பலாயம் செய்ய வேண்டி வந்த இடம் இதுவே.
பஞ்ச பாண்டவர்கள் பூஜித்த ஸ்தலம். இந்த தேவியை தரிசனம் செய்தால் ரணம், ரோகம், கடன், சத்ரு இவைகளை அழித்து நமக்கெல்லாம் வேண்டிய 16 செல்வங்களையும்
கொடு்க்கக்கூடிய தெய்வம் இவள் ஒருவள் மட்டுமே. இத்தேவியை தரிசனம் செய்து எல்லா கஷ்டங்களும் நீங்க நிகுபாலயாகம் செய்து வேண்டும் வரங்களை அடைவீர். பிரதி அமைவாசை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை யாகம் நடைபெறும். இத்திருக்கோவிலில் கரிய வண்ணமுடையவளாய், சந்திர கலை சிரத்தில் பிரகாசிக்க, சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திய பதினெட்டு கைகளுடன் சிம்ம
வாகனமாக நான்கு சிங்கங்கள் அவள் முன்னே நிற்க, இடது காலை மடித்து வலது புறமாக கலைமகள் சரஸ்வதியும் வலது புறமாக அவள் மகள் மகாலெட்சுமியும் வண்ணச் சிற்பங்களாக நின்று அருள் புரிகின்றனர். இத்தல விருட்சத்தில் ஒரே ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகள் உள்ள அதிசயத்தை காணலாம்.
பிரத்தியங்கிரா தேவியின் மூல மந்திரம் :
ஓம் – க்ஷம்
பக்ஷஜ்வாலா ஜீஹ்வே
கராள தம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கரே
க்ஷம் – ஹ்ரீம்பட் – ஸ்வாஹா
தினமும் பக்தியுடன் ஜெபிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய், பில்லி சூனியம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வி்ல் எல்லா ஆனந்தத்தையும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள். கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ தொலைவில் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது.

கோரக்க சித்தர் தியான முறை



தியானம்

பிரணவத்தைப் பொருளோடு திரும்பத் திரும்பக் கூறுவதே தியானம் என்கிறது பதஞ்சலி சூத்திரம் (யோக தந்தை பதஞ்சலி சித்தர்)
ஒம்காரத்தை அதன் பொருளுணர்ந்து ஜபித்தால் ஈஸ்வரத் தியானம் கிட்டுகிறது. சாதாரண உணர்வுக்குக் கீழே போகிற நிலை தூக்கமெனப்படுகிற்து தியானமோ உணர்வுக்கு மேலே போகிற நிலை விழித்துக்கொண்டே தூங்குவதெனலாம் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறும் நிலையே தியானம்.
ஐம்புலன்களிருந்து மனத்தைப் மீட்கப் பயிற்சி செய்வதே தியானமாகும். ஒரு பொருளை முழுவதும் அறிந்துகொள்ள குரங்கு பிடியாக பிடித்துக் கொள்வதுதான் தியானம்.
தியானத்தின் ஒரு துளி சுவை கண்டவர்கள்கூட சாதாரண உலக வாழ்க்கையை விரும்பமாட்டார்கள். தியணத்திற்காக அதிகமாக உடலையும் வருத்தக் கூடாது.
தியாண,த்தை காலி வயிற்றில் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் மனம் ஐக்கியமாகும் பிரம்ம முகூர்த்தமான காலை 4 முதல் 6 வரையிலும் மாலை 5 மணிமுதல் 7 மணிவரையிலும் தியானத்திற்கு ஏற்ற நேரமாகும். தியானம் ஒர் உயர்ந்த வழி உன்னதமான நோக்கதிற்கே உபயோகப்பட வேண்டும் எப்படி எண்ணுகிறாயோ அப்படியே ஆகிறாய் என்ற நியதிப்படி தியானம் அமைகிறது.
மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் எச்செயலும் வெற்றி பெரும். சாதாரண மணநிலையில் ஒருவன் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது ஐம்புலன்களும் அவைகளின் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கும். தியானத்தை வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து செய்யவேண்டும்.
கோரக்க சித்தர் தியான முறையை இவ்வாரு கூருகிறார்.
வடமுகமா யாதனமேல் அமர்ந்து யாக்கை
வலுவாகத் திரேகந்தலை யசைந்தி டாமல்
தடமாக இருந்து இருவாசல் பூட்டித்
திங்களொடு தினகரனைப் பிறழா தேற்றி
வடக்கு முகமாக ஆசணத்தில் அமர்ந்து உடம்பை வலுவாக நிறுத்தி உடல், தலை கை, கால் அசைந்திடாமல் மலையைப் போல் உறுதியாக நின்று, இரு கண்களையும் மூடி சந்திர சூரிய கலைகளில் முறை பிசகாமல் வாசியை ஏற்றி இறக்கி தியானம் செய்யச் சொலகிறார்.
சந்திர கலை = இடது நாசித்துவாரம் சூரிய கலை = வலுதும்
 நாசித்துவாரம்
வாசி = மூச்சுக் காற்று
தியானத்திற்கும் பொருள் வசதிக்கும் .யாதொரு தொடர்பும் இல்லை. தியானத்தில் சித்தயடைந்து அற்புத ஆற்றலுடன் ஒருவர் இருந்தாலும் பிறர் அறியாமல் சாதாரண மனிதனைப்போல் வாழலாம். தியானத்தினால் மனச்சலனம் அழிக்கப்ட்டு புலன்களின் ஓட்டமும் கட்டுப்படும். ஒரு சிலருக்கு எத்தனை முயற்ச்சி செய்தாலும் மனதை ஒரு குறிப்பிட்ட பொருளில் ஒரு வினாடிக்கூட நிறுத்த முடியாது. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் இந்த நிலையை மாற்றலாம். காற்றில் ஆடாத தீபம் போல தியானத்தின் போது மனம் சலனமற்றிருக்க வேண்டும் என்கிறது பகவத் கீதை.
தனிமையான இடத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட மனுதுடன் பிராணாயாமம் செய்து மனச்சம் நிலையுடன் தியானம் பழகவேண்டும் பார்பவன் பார்க்கப்படும் பொருள் என்ற நிலையை தாண்டி அனுபவிக்கும் ஆனந்த உணர்வை நிலைபடுத்திக் கொள்ள தியானத்தில் முயலவேண்டும். வெளித்தோற்றத்தில் ஒருவன் தியானிப்பதுபோல தோன்றினாலும் சாதகனின் மனம் தியானப் பொருளில் போராடிக்கொண்டிருக்கும். தியானத்திற்கு மனோ பலவீனங்களை முதலில் வெல்ல வேண்டும்.

Friday 9 August 2013

செல்வ வளத்தை அள்ளித்தரும் சதுர்க்கால பைரவர் வழிபாடு

செல்வ வளத்தை அள்ளித்தரும் சதுர்க்கால பைரவர் வழிபாடு


கும்பகோணத்துக்குக் கிழக்கே 5 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் இடமே திருவிசநல்லூர் ஆகும்.இதன் பழைய பெயர் வில்வவனம் ஆகும்.பூமியில் உருவான இரண்டாவதுகோவில் இது என்பார்கள்.இங்கு சிவனும்,மஹாவிஷ்ணுவும்  ஒரே கோவிலில் இருந்து அருள்பாலித்துவருகிறார்கள்.இங்குள்ள சிவனுக்கு வில்வ வன ஈசன்,புராதன ஈசன்,சிவயோகி நாதர் என்ற பெயர்கள் உண்டு.ஓவ்வொரு பெயருக்கும் ஒரு புராணம் உண்டு.இங்கு ஈசான மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.த்ரேதாயுகம்,க்ருதயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்ற நான்கு யுகத்துக்குமான பைரவர்கள் இங்கு இருந்து அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகின்றன என்றால்,இந்த கோவில் சுமார் 20,00,000 ஆண்டுகளாக இருக்கின்றதாகத் தானே அர்த்தம்!!!

ஒரே இடத்தில் நான்கு பைரவர்கள் இருப்பதால் இவர்களுக்கு சதுர்யுகபைரவர் என்றும்,சதுர்க்கால பைரவர் என்றும் பெயர்கள் இருக்கின்றன.நமது வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய பைரவர்கள் இவர்கள்! ஆமாம்,நான்கு யுகங்களையும் இவர்கள் கண்காணித்துவருகிறார்கள் எனில்,இவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்?!!?


இந்த சதுர்யுகபைரவர்களை ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியன்றும் வரும் இராகு காலத்தில் 108 ஒரு ரூபாய் வைத்து அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட தாமரைப்பூவை வைத்து பின்வரும் பொருட்களைக் கொடுத்து பூஜை செய்ய வேண்டும்.
அவைகள்:சிகப்பு அரளி மாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளை நான்கு,நான்காக வாங்கிட வேண்டும்.


இந்த பூஜைப்பொருட்களை பூசாரியிடம் கொடுத்து வளர்பிறை அஷ்டமியில் பூஜை செய்துவிட்டு,108 ஒரு ரூபாய் நாணயங்களை நமது வீடு அல்லது அலுவலகத்தில் இருக்கும் பணப்பெட்டியில் வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும்.


ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
          ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் 
          சகவம்ஸ ஆபதுத்தோரணாய
          அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய
          ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
          மமதாரித்திரிய வித்வேஷணாய
          ஓம்ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ

பிறகு,தினமும் இந்த  ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் தீர்ந்து,பெரிய பணக்காரராக ஆகிவிடுவோம்.

அப்படி ஆவதற்கு,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;மது,போதைப்பொருட்களை நிரந்தரமாகப் பயன்படுத்துவதைக்கைவிட வேண்டும்;முறையான தாம்பத்தியம் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்.இதில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்ற முடியாமல் போனாலும் இந்த வழிபாடு பலன் தராது.

ஓம்சிவசிவஓம்

Sunday 24 February 2013

பிரம்மவித்து

இறைவனே இயற்கையின் வடிவங்களாய் நின்று அனுபவங்கள் மூலமாக குருவாகத் துலங்குவார் என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவர் மனித வடிவில் சற்குருவாய் உணரப்படுகிறார். சற்குருவானவர் ஞானிகள் மூலம் ஞான விஷயங்களை நமக்குத் தெளிவிக்கிறார். அவர்கள்எந்த வேசத்திலும் இருப்பார்கள். காவியுடை உடுத்திதான் வருவார்கள் என்றில்லை. பிச்சைக்காரர்கள் போல, பைத்தியக்காரர் போல, நம்மைப் போல மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சற்குருவின் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்குள்ளே எப்போதும் எண்ணங்கள் மூலம் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். சமீபத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு நெல்வேலி வண்ணார்பேட்டையில் அப்படி ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. நான் கல்லாவில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். பகல் நேரம் அன்று கூட்டம் அதிகமில்லை. 


யாரோ வருவது போல் தோன்றவே, நிமிர்ந்து பார்த்தேன். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நின்றிருந்தார். வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி, கையில் ஒரு மஞ்சள் பை. ஐயா என்ன வேண்டும் என்று கேட்டேன் ? அவர் டக்கென்று நீ தானே அழைத்தாய் ? பிறகு என்னிடம் கேட்கிறாய் ? என்றார். எனக்கு குழப்பமாகி விட்டது. வியாழக்கிழமை என்றாலே பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாக இருக்கும். இவரைப் பார்த்தால் அப்படியும் தெரியவில்லை. டீ சாப்பிடுகிறீர்களா ? என்று கேட்டேன். சரி போடச் சொல் என்றார். பிறகு மெதுவாகக் கேட்டேன் நான் உங்களைப் பார்த்ததே இல்லையே ? நான் அழைத்தேன் என்று சொல்கிறீர்களே ? என்று கேட்டேன். ஐயா சொன்னார்கள் ''சேய் அழைக்கிறான் செல் என்று '' அதனால் வந்தேன். சரி போய் வருகிறேன் என்று சொல்லி டீக்கான பணத்தை தந்துவிட்டு போய் விட்டார். அதன் பிறகு எப்போதாவது வந்து ஏதாவது சொல்லி விட்டுப் போவார். அப்படி ஒரு முறை அவர் வந்திருந்த போது என்னுடை ஜோதிட நண்பர் ஒருவர் கடைக்குள் அமர்ந்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். இவரைக் கண்டவுடன் எழுந்து நின்று வணங்கி நலம் விசாரித்து விட்டு வெளியில் சென்று அவரிடம் பேசிவிட்டு வந்தார். அவர் சென்ற பிறகு நண்பரிடம் விசாரித்தேன். அவர் ஒரு ஞானி என்றும். அகத்தியர் அவரிடம் பேசுவார் என்றும். பெரும்பாலான நேரங்களில் தவநிலையில்தான் இருப்பார் என்றும் சொல்லி, நிறைய சித்திகள் அடைந்தவர் என்றும் சொன்னார். எனக்கு நம்ப முடியவில்லை. எனக்கு அப்போதுதான் புரிந்தது அவர் முதல் நாள் ஐயா சொன்னார்கள் என்று சொன்னது அகத்திய பெருமானை என்று. அதன் பிறகு அவரோடு நெருக்கம் அதிகமானது. என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார், யாரிடமும் தன்னை வெளிப்படுத்தக் கூடாது என்று. மக்கள் இவ்வளவு துன்பப்படுகிறார்கள், கொத்துகொத்தாய் செத்து மடிகிறார்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு ஐயாவும் சரி, நீங்களும் சரி ஒன்றும் செய்யாமல் இருப்பது ஏன் ? என்று ஒரு நாள் கேட்டு விட்டேன். ஒரு முறைப்பு, அப்பா அப்படி ஒரு கூர்மையான பார்வையை வேறெங்கும் நான் பார்த்த தில்லை. 

சில நொடிகளில் சாந்தமாகிய அவர், அதை நீயே தெரிந்து கொள் என்றதோடு, இனி இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்காதே என்றார். நான் ஒன்றும் பேசவில்லை. எனக்கு அவர் சில விஷயங்கள் மூலமாகத் தன்னை உணர்த்திவிட்டார்.
இவ்வளவு பெரிய விளக்கம் ஏன் ?என்றால், ஞானிகள், பெரியோர்களை சந்தித்தால் என்ன நடக்கும் ? இப்படி ஒரு சந்தேகம் நாரதருக்கு வந்துவிட்டது. உடனே அவர் பரந்தாமனிடம் கேட்க, அவர் ஒரு புழுவை சுட்டிக் காட்டி அதனிடம் கேட்கச் சொன்னார். நாரதர் கேட்ட மாத்திரத்தில் அது செத்து வீழ்ந்தது. பரந்தாமன் அதன் பிறகு பட்டாம் பூச்சியிடம் கேட்கச் சொன்னார் அதுவும் நாரதர் கேட்ட மாத்திரத்தில் செத்தது. நாரதர் கலங்கினார். இறைவனிடம் முறையிட்டார். கொஞ்ச நாள் கழித்து வா என்று அனுப்பி விட்டார் பரந்தாமன். சிறிது நாள் கழித்து வந்த நாரதரிடம் ஒரு மான் குட்டியை கேட்கச் சொன்னார் . பாவம் அதுவும் மாண்டது. மீண்டும் சிறிது நாள் கழிந்த பிறகு நாரதர் சென்ற போது பரந்தாமன் ஒரு கன்றுகுட்டியைக் காட்டி அதனிடம் கேட்கச் சொன்னார். உடனே நாரதர் எல்லோரும் என்னைக் கலகக்காரன் என்றுதான் சொல்வார்கள். இப்படியே போனால் கொலைகாரன் என்று சொல்லும் நிலை வந்துவிடும் போலிருக்கிறதே என்று புலம்பியபடி கன்றின் அருகில் சென்றார். பரந்தாமன் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார். வழக்கம் போல கன்றுக்கட்டியும் செத்தது. நாரதர் மிகுந்தந மனவருத்தமுடன் சென்றார். சில மாதங்கள் சென்ற பிறகு நாராயணா இப்போதாவது சொல்லேன் பெரியோர் தரிசனத்தால் விளையும் பயன் என்ன ? பரந்தாமனும், பிரம்ம புத்திரனே நீண்டநாள் புத்திரப் பேறு இல்லாமல் இருந்த காசி ராஜனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதனிடம் கேள் உனக்கு விளக்கம் கிடைக்கும் என்றார். உதை தான் கிடைக்கும். என்று நாரதர் அஞ்சினார். பரந்தாமன் தைரியம் சொல்லவே அஞ்சியபடியே போய் குழந்தையிடம் கேட்டார். நல்ல வேளை குழந்தை சாகவில்லை என்று நாரதர் எண்ணிய வேளையில் அந்த அதிசயம் நடந்தது. பிறந்து ஓரிரு நாட்களே ஆன குழந்தை பேசத் தொடங்கியது. மகரிஷியே புழுவாய் இருந்த நான் உமது தரிசனத்தால் பட்டாம் பூச்சியாகப் பிறந்தேன். மீண்டும் உங்களை தரிசித்ததால் மான் குட்டியாகப் பிறக்கும் பாக்யம் பெற்றேன். அப்போதும் உங்கள் தரிசனம் கிட்டவே பசுங்கன்றாய் பிறந்தேன். இறைவன் கருணையால் அப்போதும் உங்களை தரிசித்ததால் அரிய மானிடப்பிறவி கிடைத்தது என்றது. அதாவது பெரியோர், ஞானிகள் தரிசனம் புழுவைக்கூட ஒப்பற்ற மனிதனாக மாற்றும் வலிமை உடையது என்பது தத்துவம். எனவே அனைவரும் ஞானிகளைச் சார்ந்து அவர்களுக்கு தொண்டு செய்து வாழ்வதால் பிறவிப் பயனை அடையலாம். கொடிய விஷத்தையும் அமிர்தமாக மாற்றும் வல்லமை உடையவர்கள் ஞானிகள். அவர்கள் எப்போதும் உலக நலன் கருதியே நிஷ்டையில் இருப்பார்கள். உலகப் பொருள்களில் பற்று வைக்க மாட்டார்கள். சாஸ்திரம் பார்க்காமலையே எல்லா சாஸ்த்திரங்களையும் மக்களுக்கு போதிப்பார்கள். அவர்கள் இருக்கும் இடமெல்லாம் செழிக்கும். அத்தகைய ஞானிகள் நாலு வகையாக இருக்கிறார்கள். பிரம்மவித்து, பிரம்மவரன், பிரம்ம வரியன், பிரம்மவரிட்டன் என்பதே அந்த நாலு வகையாகும். குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே ஞானம் பெற்று தன்னைப் போல் மற்ற குடும்த்தினர் அனைவரும் ஞானம் பெற வேண்டும் என எண்ணி அதற்காக உழைப்பவரே பிரம்மவித்து எனப்படுவார். அடுத்த பிரம்மவரன் என்பவர்கள் பசிக்கிற போது தனக்கு பிடித்தவர்களிடம் யாசித்து உணவருந்திவிட்டு எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பர். இவர்களுடைய பசி ஆற்றியவர்களுக்கு சற்குருவின் அருள் கிடைக்கும்.
பிரம்மவரியன் என்ற நிலையில் உள்ளவர்கள் யாரிடமும் எதையும் யாசிக்க மாட்டார்கள். ஏதோ மரத்தடியில் அமர்ந்தோ, சாலையில் நின்று கொண்டோ தியானம் செய்து கொண்டே இருப்பார்கள். நல்ல ஆன்மாக்கள் இவர்களை கடந்து செல்லும் போது அன்பு கூர்ந்து தரும் உணவை ஏற்றுக் கொள்வார்கள்.அப்படி இல்லை என்றால் ஒரு மாதம் ஆனாலும் பட்டினியாக இருப்பார்கள். இவர்களின் பசியாற்றியவர்களை துன்பம் நெருங்க அஞ்சும்.
பிரம்மவரீட்டன் என்ற நிலை ஞானிகள் யாரிடமும் யாசிப்பதில்லை. யார் கொடுத்தாலும் ஏற்பதில்லை. காற்றையே உணவாகக்கொண்டு இறைவனோடு கலந்து நிற்பார்கள். இவர்கள் பேச்சு மிகக்குறைவு. இவர்களைப் பார்த்தாலே பாவ விமோசனம்தான். இத்தகைய ஞானிகளை கண்டு கொண்டு அவர்களுக்கு பணிவிடை செய்து, சற்குருவின் பரிபூரண அருளைப் பெற்று உய்வோமாக.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.


courtesy:Monuanthin alaigal

Saturday 23 February 2013

உங்கள் வகையில் ஆலயதீப கைங்கர்யம்


உங்கள் வகையில் ஆலயதீப கைங்கர்யம்


Support Us

சிவாய நம:
யார் வேண்டுமானாலும் இந்த தெய்வீக திருப்பணிக்கு உதவ முடியும். ஆங்காங்கே இருப்பவர்கள் எண்ணெய் வாங்கியும் அல்லது பாரத ஸ்டேட் வங்கியில் பணமாக செலுத்தவும் முடியும். பணம் செலுத்த வேண்டிய account விவரங்கள் கீழ்க்கண்டவாறு:
Account Name:  GIRIDHARAN M
Bank Name:  STATEBANK OF INDIA
Branch :  SAIBABACOLONY BRANCH(4792)
Savings Bank Account No:  11200621292
Inform us Via email the date and amount of the deposit and your name and address immediately for us to send the acknowledgement.
or Contact  GIRIDHARAN M (MOBILE:7200086562)


எட்டு முக ருத்ராட்சம் :
-------------------------------

எட்டு முக ருத்ராட்சம் விநாயகபெருமானின் அருள் பெற்றது .இதனை அஷ்டகணபதி ஸ்வரூபம் என்பர்.இதன் ஆதிக்க கிரகம் ராகு.

ஸ்ரீ மத் தேவி பாகவதம் ,பத்மபுராணம் ,மந்திர மகார்ணவா அனைத்தும் இம்மணியை விநாயகர் மற்றும் முருகபெருமானின் அருள் பெற்றதாக குறிப்பிடுகின்றன .

ருத்ராட்ச ஜாபால உபநிஷதம் இம்மணியை அஷ்ட மாதர்,அஷ்ட வசுக்கள் மற்றும் கங்கையின் அருள் பெற்றதாக கூறுகிறது.இதை அணிபவர்கள் மேற்கூறிய அனைவரது அருளையும் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கிறது.

இதை அணிபவருக்கு வாழ்க்கையில் வளமும்,உடல் நலமும் கிட்டும்.விக்னேஸ்வரனின் அருள் பெற்றதால்
வாழ்வில் தோன்றும் அனைத்து தடைகளும் நீங்கும்.பகுத்தறியும் புத்தி,எழுத்தாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,செல்வம்,
தலைமைப் பதவி அனைத்தையும் தரும் ஆற்றல் எட்டு முக ருத்ராட்சத்திற்கு உண்டு.பொய் சொன்ன பாவத்தை போக்கும் .

இம்மணியும் அரிதாகவே கிடைக்கும்.

யார் அணியலாம்:

இதை ஏழு முக ருத்ராட்சத்தோடு சேர்த்து அணிவது சிறந்தது.வாழ்வில் பல தடைகள் தோன்றி,தொடர் தோல்விகளைச் சந்தித்து கொண்டிருப்பவர்கள் இதை அணிந்தால் தடைகள் விலகி வெற்றிக்கிடைக்கும் .

சனி தோஷம் உள்ள ஜாதகர்கள் இதை அணிந்தால் சனிக் கிரகத்தின் தீய பலன்கள் நீங்கி,நன்மைகள் விளையும் .

மருத்துவ பயன்கள்:

இதன் ஆதிக்க கிரகம் ராகு.

நரம்பு மண்டலத்திலுள்ள கோளாறுகளைச் சீர்படுத்தி பலபடுத்துகிறது .கல்லிரல் கோளாறு,மூத்திரப்பை கோளாறு,
கண்புரை நோய்,ஹைட்ராசில் என்னும் சுவாசக் கோளாறு, மனரீதியான பாம்புகள் பற்றிய அச்சத்தை போக்குகிறது .

ருத்ராட்சமும் ஜோதிடமும்:

இது ராகுவின் அருள் பெற்றது.ஜாதகத்தில் ராகுவின் தீய பார்வையால் ஏற்படும் நுரையீரல் நோய்,பாதங்கள் மற்றும் தோள்களில் ஏற்படும் நோய்கள்,கண்புரை நோய்,பாம்புக்கடி,சுவாசக் கோளாறு போன்றவை இதை அணிவதால் நீங்கும். திடீரென்று வேலை பறிபோதல், வருமான இழப்பு போன்றவை இதை அணிவதால் நீங்கும்.

ருத்ராட்ச மந்திரம்:

ஓம் ஹம நமஹ:

நன்றி ருத்ராட்ச நூல் ஆசிரியர் கீர்த்தி

ஏழு முக ருத்ராட்சம் :

ஏழு முக ருத்ராட்சம் :
------------------------------ 
ஏழு முக ருத்ராட்சம் சூரியன்,சப்த மாதர்கள் ,ஆதிசேஷன் , காமதேவன் ,முருகன் ஆகியோரின் அருள் பெற்றது.
அநந்தன் அருளும் இணைந்தது .அநந்தன் என்பது ஆதிசேஷனையும் , அந்தம் என்பது இல்லாத பரமனையும்
குறிக்கும்.

எண்களில் மிக பெரிய சக்தி படைத்த எண் ஏழு ஆகும்.இந்த மணியை அணிபவர்களுக்கு,பாம்பு,தேள் உட்பட
விஷ ஜந்துக்களால் ஆபத்து நேராது என்று பத்ம புராணம் கூறுகிறது.

திருடுதல்,தகாத உறவு,போதை பழக்கங்களால் உண்டான பாவத்தை போக்கும்.

சப்தமாதர்கள்(பிராமி,கௌமாரி,மாஹேந்திரி, வைஷ்ணவி, மாஹேஸ்வரி , வாராஹி, சாமுண்டி அனைவரது
அருள் பெற்றதால் இதை அணிபவருக்கும்,பூஜிப்பவருக்கும் எல்லா செல்வங்களும் கிட்டும்.துரதிர்ஷ்டத்தை நீக்கும். நாக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

இந்த மணி புதையல் போன்ற மறைந்துள்ள செல்வங்களைப் பெற்றுத்தரும்.பகைவரை அழிப்பதோடு,எதிர்பாலினரை வசியப்படுத்தும்.சப்தத ரிஷிகளின் அருளை பெற்று தரும்.

ஏழு முக ருத்ராட்சத்தை அணிவதாலோ ,பூஜிப்பதாலோ சந்தியா வந்தனம் ,காயத்ரி மந்திரம் ஜெபித்தல்
ஆகியவற்றின் பலனைப் பெறலாம்,

இதன் ஆதிக்க கிரகம் சனி.

யார் அணியலாம் :

எல்லாவித தொழிலகள் ,வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் ஏழு முக ருத்ராட்சத்தை அணியலாம். வியாபாரத்தில் பெரிய வெற்றியை தரும் .ஏழு முக ருத்ராட்சதின் ஆற்றல் அளப்பரியது .அதை எல்லாராலும் தாங்கிக்கொள்ள முடியாது.எனவே எட்டுமுக ருத்ராட்சத்தொடு சேர்த்து அணிந்து கொள்வது சிறந்தது.
பூஜை அறையிலும் வைத்து வணங்கலாம்.

பணப்பெட்டி,பணப்பை போன்றவற்றில் இம்மணியை வைத்து கொள்வதால் பணம் பெருகும்.

54+1,108+1 சேர்க்கையில் ஜெபமாலையாக உபயோகிக்கலாம்.உடலிலும் அணிந்து கொள்ளலாம்.

மருத்துவ பயன்கள்:

இதன் ஆதிக்க கிரகம் சனி.

பலவீனம்,வயிற்றில் வலி,பக்கவாதம்,.காக்கைவலிப்பு,வாய் பேச முடியாத நிலை,கருசிதைவு ,பெண்களுக்கான
சூதக கோளாறுகள் இவற்றைப்போக்கும் .

ஆர்த்ரிடிஸ் என்னும் வாத நோயைக் குணபடுத்தி ,வழியை போக்கும்,தசை வழிகளை போக்கும்.
மலட்டுத்தன்மை உட்பட அனைத்து நோய்களையும் போக்கும் .

இருதய நோய்,தொண்டை நோய்,ரத்தபுற்றுநோய்,எலும்பு நோய் ஆகியவற்றை குணமாக்கும்.ஆண் உயிரணுக்களை சுத்தம் செய்து ஓஜஸ் என்னும் தெய்வீக ஆற்றலை அளிக்கும் .


ருத்ராட்சமும் ஜோதிடமும்:

இது சனி கிரகத்தின் ஆதிக்கம் பெற்றது.சனியின் தீய பார்வையால் விளையும் திடிர் நோயுறுதல், மலட்டுத்தன்மை,சளி போன்றநோய்கள் குணமாகும்.

மேலும் வாழ்வில் அவநம்பிக்கை,சாதனைகள் புரியத் தடை , நீண்டநாள் நோய்கள் ,வறுமை நீங்கும்.

ஏழு முக ருத்ராட்ச மந்திரம்:

ஓம் ஹம நமஹ :


நன்றி ருத்ராட்ச நூல் ஆசிரியர் கீர்த்தி

Thursday 24 January 2013

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்.

முருகன் சென்னை மாற்று திறனாளிகலுக்கு அரசு பலவகையில் உதவி செய்வதக சொல்லுராங்கள் ஆனாள் அங்கு சென்றள் தேவை இல்லமால் ஆலக்கழிப்பு செய்கிரர்கள் அரசு அதிகரிகள் உதரனத்துக்கு என் நண்பன் மாற்றுத்திறனாளி இவருக்கு ஊனம் முறறேர் உக்கத் தொகையக மாதம் 1000 ரூபாய் தருவதக அரசு திட்டம் இருந்தும் இவர் பதிவு செய்து 2 வருடம் ஆகுது இது வரை உதவித் தொகை கிடைக்க வில்லை யாரிடம் புகர் கோடுப்பது தெரித்தல் எனக்கும் தெரியபடுத்தவும்




டிசம்பர் 3: இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்.

அன்பும் வாய்ப்பும் அள்ளித் தருவோம்.....
ஒன்றாய் இணைந்தே விண்ணைத் தொடுவோம்!!!





stone art

படத்தில் காண்பது போன்று மூன்று வளையங்கள் ஒரே காலில் செய்தது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் கோயிலில் உள்ளது சிற்பக்கலையில் சோழர்களில் சிறப்பை உணர்த்திக்கொண்டு இன்றும் அனைவரையும் வியக்கவைக்கிறது.




sivamediation

śivo guruḥ śivo vedaḥ śiva devaḥ śivaḥ prabhuḥ |
śivo'smyahaṁ śivaḥ sarvaṁ śivadanyanna kiṁcana ||


Shiva alone is Guru; Shiva alone is Vedas;
Shiva alone is Lord; Shiva alone is Shiva;
Shiva alone is All. There is none other than Shiva.

~ Varaha Upanishad (IV.32) of the Krsna Yajurveda




ஸ்ரீ சரபேஸ்வரர்,அதாவது சிவபெருமானின் ஒரு அவதாரம்


இவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்,அதாவது சிவபெருமானின் ஒரு அவதாரம்...அவதாரம் என்றவுடன்,மனிதனைப் போல் பிறந்து இறப்பவர் என்று நினைத்துவிடக் கூடாது.சுவாமி,தன் பக்தர்கள் துயரை துடைக்க ஒரு திருவவதாரம் எடுத்து,தன் வேலை முடிந்தவுடன் மறைவார்..இவர் விஷ்ணுவைப் போல் பிறப்பதில்லை... ஸ்ரீ சரபேஸ்வரர் அவதாரம் ஏன் ஏற்பட்டது என்று,இனி பார்ப்போம்...

ஹிரண்யன் எனும் கொடியவன் ,பிரம்மாவிடம் வரம் பெற்று,பல கொடிய செயல்களை செய்து வந்தான்...பெரும் நாத்திகனாகவும் இருந்தான்...அவனுக்கு,பிரகலாதன் எனும் ஒரு மகன் இருந்தான்...அவன் ஒரு பெரும் விஷ்ணு பக்தன்....ஒரு முறை,அவன் தந்தை,தன் மகனை எப்படியாவது தன் பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும்,அவனை எப்படியாவது விஷ்ணு பக்தியிலிருந்து திசை திருப்ப வேண்டும் என்று,பிரகலாதனிடம் பலவாறு உபதேசம் கூறினான்...பிரகலாதன் அவன் உபதேசத்துக்கு செவிசாய்க்கவில்லை...

இருவருக்கும் வாக்குவாதம் வர,விஷ்ணு தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானென கூற,அருகில் இருந்த தூணில் உன் விஷ்ணு கடவுள் வருவானா என்று ஹிரண்யன் சவால் விட,விஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்து,அத்தூணை பிளந்து,ஹிரண்யனை கொன்று,அவன் ரத்தத்தை குடித்து தீர்த்தான்...ஆனால்,அவன் ரத்தத்தை குடித்தவுடன்,மிகவும் கர்வம் கொண்டு,தன் நிலமை மறந்து, உலகை துன்புறுத்த ஆரம்பித்தான்...


தேவர்கள் எல்லோரும் அதனை பொறுக்க முடியாமல்,எம்பெருமான் சிவனிடத்தில் தஞ்சம் புகுந்தனர்...அன்பற்கு அன்பனான எந்தை பெருமான்,வீரபத்திரரை நோக்கி,"நரசிம்ஹத்தின் செருக்கை அழி" என்று கட்டளையிட்டார்... வீரபத்திர ருத்ர மூர்த்தி சரபபக்ஷி உருவெடுத்தார்....சரப பக்ஷி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் ஒரு பெரிய பறவை....அந்த உருவை வீரபத்திர ருத்ரர் எடுத்து,நரசிம்ஹத்தின் பிடரியில் பாய்ந்து,அந்த அங்கங்கள் எல்லாவற்றையும் குத்த,கர்வம் அகன்ற நரசிம்ஹத்தை உயிர் இறக்க செய்தார்...அதன் தோலை உரித்து,சிவபெருமானின் திருச்சன்னதியில் வைத்து,வணங்கினார்,சிவ பெருமானை....அங்குள்ள தேவர்கள் எல்லோரும்,அந்த நரசிம்ஹத்தின் தோலை ஆடையாக அணிந்துக் கொள்ளும்படி ,சிவபெருமானிடம்,விண்ணப்பித்தார்கள்...சிவபெருமான் தன் அன்பர்களின் வேண்டுகோளை ஏற்று,அவ்வாறே செய்தார்.. இந்த வரலாறு,சைவர்கள் கட்டிய புளுகு என்று வைணவர்கள் கூறுவார்கள்..அதனால்,வேதத்திலிருந்து நாம் சான்றை காட்டுவோம்...

1 ."யோ கோரம் வேஷமாஸ்தாய சரபாக்கியம் மஹேஸ்வர :| ந்ருஸிம்ஹம் லோகஹந்தாரம் ஸ்ம்ஜகாந மஹாபல :| ஹரிக்ஹரந்தம் பாதாப்யா மநுயாந்தி ஸுரேச்வரா :| மாவதீ : புருஷம் விஷ்ணும் விக்ரமஸ்வ மஹாநிசி | க்ருபயாந் பகவாந் விஷ்ணும் விததார நகை: கரை :| சர்மாம்பரோமஹாவீரோ வீரபத்ரோ பபூவஹ || ஸ ஏகோ ருத்ரோ த்யேய : " ( எவர் கோரமான சரபவேஷந் தாங்கி உலகத்தை வருத்திய நரசிங்கத்தை ஹிம்சித்தனரோ, பாதங்களால் அரியை அரிக்கின்றவரோ, புருஷரூப விஷ்ணுவை வதம் செய்யாமல் தேவரீரது பராக்கிரமத்தை மாத்திரம் காட்டியருளல் வேண்டுமென்று சர்வ தேவர்களாலும் மகாநிசியில் பின்றொடர்ந்து பிரார்த்திக்கப்பட்டனரோ, கிருபையினால் நரசிங்கத்தின் தோலை நகங்களாற் கிழித்துரித்தெடுத்து, வஸ்திரமாக அணிந்து கொண்டாரோ, மகாபலமுள்ள வீரபத்திரமூர்த்தியாகிய அந்த உருத்திரர் ஒருவரே தியானிக்கற்பாலர் ) - சரப உபநிஷத்

2. "யோமத்ஸ்ய கூர்மாதி வராஹ ஸிம்ஹாந் விஷ்ணும் க்ரமந்த வாமநமாதி விஷ்ணும் விவிக்லபம் பீட்யமா நம்.. தஸ்மை ருத்ராய நமோ அஸ்து " (எவர் விஷ்ணுவையும் விஷ்ணுவின் அவதாரங்களான மச்சம்,கூர்மம்,வராஹம்,நரசிம்ஹம் முதலியவற்றையும் வாட்டி பீடிக்கின்றாரோ,அந்த ருத்திரருக்கு நமஸ்காரம் ஆகுக ) -சரப உபநிஷத்

ஆனால்,சில வைணவர்கள் சொல்லுவார்கள்,சரபம் நரசிம்ஹத்தை கொல்ல வந்தபோது,அந்த நரசிம்ஹம் அண்டப்பேருண்டம் எனும் பறவையாகி,சரபத்தை கொன்றது என்று..ஆனால்,சரபம் நரசிம்ஹத்தை கொன்ற வரலாறு சுருதியான வேதத்தில் உள்ளது,போற்றப்பட்டுள்ளது....ஆனால்,வைணவர்கள் சொல்லுவது போல்,அண்டப்பேருண்டம் சரபத்தை கொன்றதாகக வேதத்தில் இல்லை...நரசிம்ஹம் சரபத்தால் கொல்லப்பட உண்மை சரித்திரத்தை எண்ணி,மனம் பொறாமல் தான் வைணவர்கள் இப்படி ஒரு கதையை கட்டிவிட்டுள்ளனர்கள் என்று அறிவுடையோர் அறிவர்...

"எரித்தமயிர் வாளர்க்கண் வெற்பெடுக்கத் தோளொடு தாள்
நெரித்தருளும் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினாள்
உரித்த அரித்தோல் உடையான் உறைவிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவர்தாம் தக்காரே"
என்று திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் சரபேஸ்வரர் பராக்கிரமம் காட்டப்படுகிறது.


"துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை யாகங் கீண்ட
அங்கனகத் திருமாலு மயனுந் தேடு
மாரழலை யனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேன் மன்னி நின்ற
செங்கனகத் திரடோளெஞ் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேனானே"
என்று அப்பர் சுவாமிகளும் அருளியுள்ளார்..


இச்சரித்திரம் நமக்கு பல உண்மைகளை கூறுகிறது,அதாவது நாத்திகம் பேசுவொர் சிவனால் தண்டிக்கப்படுவார்கள் மற்றும்,அகங்காரத்துக்கு பிராயச்சித்தம் சிவார்ச்சனையே.....