SIVASIVA

Tuesday 8 October 2013

கும்பகோணத்தில் அய்யாவடி - மகா பிரத்தியங்கிரா தேவி

ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி

அருள்தரும் மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அய்யாவடி (ஐவர்பாடி) என்ற கிராமத்தில்அமைந்துள்ளது இந்த கோவில் இந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது என்பது தனி சிறப்பு. 18 சித்தர்கள் பூஜித்ததும், அகஸ்தியருக்கு காட்சி கொடுத்ததும், மேகநாதன் (இந்திரஜித்) நிகும்பலாயம் செய்ய வேண்டி வந்த இடம் இதுவே.
பஞ்ச பாண்டவர்கள் பூஜித்த ஸ்தலம். இந்த தேவியை தரிசனம் செய்தால் ரணம், ரோகம், கடன், சத்ரு இவைகளை அழித்து நமக்கெல்லாம் வேண்டிய 16 செல்வங்களையும்
கொடு்க்கக்கூடிய தெய்வம் இவள் ஒருவள் மட்டுமே. இத்தேவியை தரிசனம் செய்து எல்லா கஷ்டங்களும் நீங்க நிகுபாலயாகம் செய்து வேண்டும் வரங்களை அடைவீர். பிரதி அமைவாசை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை யாகம் நடைபெறும். இத்திருக்கோவிலில் கரிய வண்ணமுடையவளாய், சந்திர கலை சிரத்தில் பிரகாசிக்க, சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திய பதினெட்டு கைகளுடன் சிம்ம
வாகனமாக நான்கு சிங்கங்கள் அவள் முன்னே நிற்க, இடது காலை மடித்து வலது புறமாக கலைமகள் சரஸ்வதியும் வலது புறமாக அவள் மகள் மகாலெட்சுமியும் வண்ணச் சிற்பங்களாக நின்று அருள் புரிகின்றனர். இத்தல விருட்சத்தில் ஒரே ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகள் உள்ள அதிசயத்தை காணலாம்.
பிரத்தியங்கிரா தேவியின் மூல மந்திரம் :
ஓம் – க்ஷம்
பக்ஷஜ்வாலா ஜீஹ்வே
கராள தம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கரே
க்ஷம் – ஹ்ரீம்பட் – ஸ்வாஹா
தினமும் பக்தியுடன் ஜெபிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய், பில்லி சூனியம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வி்ல் எல்லா ஆனந்தத்தையும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள். கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ தொலைவில் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது.

கோரக்க சித்தர் தியான முறை



தியானம்

பிரணவத்தைப் பொருளோடு திரும்பத் திரும்பக் கூறுவதே தியானம் என்கிறது பதஞ்சலி சூத்திரம் (யோக தந்தை பதஞ்சலி சித்தர்)
ஒம்காரத்தை அதன் பொருளுணர்ந்து ஜபித்தால் ஈஸ்வரத் தியானம் கிட்டுகிறது. சாதாரண உணர்வுக்குக் கீழே போகிற நிலை தூக்கமெனப்படுகிற்து தியானமோ உணர்வுக்கு மேலே போகிற நிலை விழித்துக்கொண்டே தூங்குவதெனலாம் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறும் நிலையே தியானம்.
ஐம்புலன்களிருந்து மனத்தைப் மீட்கப் பயிற்சி செய்வதே தியானமாகும். ஒரு பொருளை முழுவதும் அறிந்துகொள்ள குரங்கு பிடியாக பிடித்துக் கொள்வதுதான் தியானம்.
தியானத்தின் ஒரு துளி சுவை கண்டவர்கள்கூட சாதாரண உலக வாழ்க்கையை விரும்பமாட்டார்கள். தியணத்திற்காக அதிகமாக உடலையும் வருத்தக் கூடாது.
தியாண,த்தை காலி வயிற்றில் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் மனம் ஐக்கியமாகும் பிரம்ம முகூர்த்தமான காலை 4 முதல் 6 வரையிலும் மாலை 5 மணிமுதல் 7 மணிவரையிலும் தியானத்திற்கு ஏற்ற நேரமாகும். தியானம் ஒர் உயர்ந்த வழி உன்னதமான நோக்கதிற்கே உபயோகப்பட வேண்டும் எப்படி எண்ணுகிறாயோ அப்படியே ஆகிறாய் என்ற நியதிப்படி தியானம் அமைகிறது.
மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் எச்செயலும் வெற்றி பெரும். சாதாரண மணநிலையில் ஒருவன் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது ஐம்புலன்களும் அவைகளின் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கும். தியானத்தை வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து செய்யவேண்டும்.
கோரக்க சித்தர் தியான முறையை இவ்வாரு கூருகிறார்.
வடமுகமா யாதனமேல் அமர்ந்து யாக்கை
வலுவாகத் திரேகந்தலை யசைந்தி டாமல்
தடமாக இருந்து இருவாசல் பூட்டித்
திங்களொடு தினகரனைப் பிறழா தேற்றி
வடக்கு முகமாக ஆசணத்தில் அமர்ந்து உடம்பை வலுவாக நிறுத்தி உடல், தலை கை, கால் அசைந்திடாமல் மலையைப் போல் உறுதியாக நின்று, இரு கண்களையும் மூடி சந்திர சூரிய கலைகளில் முறை பிசகாமல் வாசியை ஏற்றி இறக்கி தியானம் செய்யச் சொலகிறார்.
சந்திர கலை = இடது நாசித்துவாரம் சூரிய கலை = வலுதும்
 நாசித்துவாரம்
வாசி = மூச்சுக் காற்று
தியானத்திற்கும் பொருள் வசதிக்கும் .யாதொரு தொடர்பும் இல்லை. தியானத்தில் சித்தயடைந்து அற்புத ஆற்றலுடன் ஒருவர் இருந்தாலும் பிறர் அறியாமல் சாதாரண மனிதனைப்போல் வாழலாம். தியானத்தினால் மனச்சலனம் அழிக்கப்ட்டு புலன்களின் ஓட்டமும் கட்டுப்படும். ஒரு சிலருக்கு எத்தனை முயற்ச்சி செய்தாலும் மனதை ஒரு குறிப்பிட்ட பொருளில் ஒரு வினாடிக்கூட நிறுத்த முடியாது. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் இந்த நிலையை மாற்றலாம். காற்றில் ஆடாத தீபம் போல தியானத்தின் போது மனம் சலனமற்றிருக்க வேண்டும் என்கிறது பகவத் கீதை.
தனிமையான இடத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட மனுதுடன் பிராணாயாமம் செய்து மனச்சம் நிலையுடன் தியானம் பழகவேண்டும் பார்பவன் பார்க்கப்படும் பொருள் என்ற நிலையை தாண்டி அனுபவிக்கும் ஆனந்த உணர்வை நிலைபடுத்திக் கொள்ள தியானத்தில் முயலவேண்டும். வெளித்தோற்றத்தில் ஒருவன் தியானிப்பதுபோல தோன்றினாலும் சாதகனின் மனம் தியானப் பொருளில் போராடிக்கொண்டிருக்கும். தியானத்திற்கு மனோ பலவீனங்களை முதலில் வெல்ல வேண்டும்.